புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை பகுதியை சேர்ந்தவர் டைரக்டர் பாண்டிராஜ். இவர் பசங்க உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். தற்போது இவர் சென்னையில் வசிக்கிறார்.
இவரிடம் புதுக்கோட்டை பூங்கா நகர் பகுதியில் வசிக்கும் குமார் என்பவர் பழக்கமாகி
தனது இடத்தை விற்பதாக கூறி 2013ம் வருடத்தில் இருந்துசிறுக சிறுக இதுவரை 1கோடியே89லட்சம் ரூபாயை வாங்கி உள்ளார்.
ஆனால் குமார் இதுவரை இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்கவில்லை. இது பற்றி டைரக்டர் பாண்டிராஜ் கேட்டபோது சாக்குபோக்கு சொல்லி காலம் கடத்தி வந்து உள்ளார். இதனால் டைரக்டர் பாண்டிராஜ் புதுகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.