Skip to content
Home » புதுகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை திறந்த அமைச்சர்கள்..

புதுகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை திறந்த அமைச்சர்கள்..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், தேக்காட்டூர் ஊராட்சியில், இலங்கைத் தமிழர் நலன் மறுவாழ்வு முகாமில், பொது பற்றும் மறுவாழ்வுத்துறையின் சார்பில், ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 58 குடியிருப்புகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்ருபதி,  சிறுபான்மையினர் நலள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்  செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,   சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வி.மெய்யநாதன்  ஆகியோர்கள், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  தலைமையில் இன்று (06.02.2024) குத்துவிளக்கேற்றி

திறந்து வைத்தார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூம்,  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா  , முன்னாள் அரசு வழக்கறிஞர்  கே.கே.செல்யாளர்டியார் , மாவட்ட வருவாய் அலுயவர் மா.செல்வி , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசார், துணை இயக்குநர் (அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை கே.ரமோர், அரிமனம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகனாமுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுலவர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!