Skip to content
Home » புதுவை தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்படுவாரா?

புதுவை தலைமை செயலாளர் இடமாற்றம் செய்யப்படுவாரா?

புதுவையில்   என். ஆர். காங்கிரஸ்,  பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.  என்ஆர் காங்கிரசை சேர்ந்த என்ஆர். ரங்கசாமி முதல்வராக இருந்தபோதிலும்  அந்த மாநில தலைமை செயலாளர்  ராஜீவ் வர்மா தன் இஷ்டத்துக்கு நடப்பதாக குற்றச்சாட்டு  எழுந்துள்ளது.

முதல்வர்,, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்று புகார் கூறப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்படும் கோப்புகளை பல்வேறு கேள்விகள் கேட்டு திருப்பு அனுப்புவதாக குற்றஞ்சாட்டிப்படுகிறது. இதனால் அதிகாரிகள் மீது எம்.எல்.ஏ.க்கள் கடும்அதிருப்தியில் உள்ளனர்.  கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கூட அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம்எச்சரிக்கை விடுத்தார். சமீபத்தில் நிதித்துறை செயலாளரும், தலைமை தேர்தல் அதிகாரியுமான ஜவகர் தலைமை தேர்தல் அதிகாரி தவிர அனைத்து பொறுப்புகளில் இருந்தும்விடுவிக்கப்படார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா நிதித்துறை அமைச்சரும், முதல்வருமான ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் இந்த உத்தரவை பிறப்பித்ததாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரை சட்டசபையில் உள்ள கருத்தரங்கு அறைக்கு அழைத்துசரமாரி கேள்வி எழுப்பினர். இதனால் அரசு சார்பில், புதுவை அரசு தலைமை செயலாளரை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்குபரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைமை செயலாளர் ராஜீவ்வர்மாவும் தன்னை இடமாற்றம் செய்யும் படி மத்திய உள்துறைஅமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிகிறது. எனவே தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!