பெங்களூரு மாநகராட்சியில் உள்ள புலிகேசி நகர்(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.அன்பரசன்(59) அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் ஆவார். புலிகேசிநகர் தொகுதியில் 50 %பேர் தமிழர்கள் வசிக்கிறார்கள். இஸ்லாமியர்கள், பட்டியலின மக்களும் அதிக அளவில் உள்ளனர்.
புலிகேசி நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக முரளி போட்டியிடுகிறார். எனவே புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக, பாஜகவை எதிர்த்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 சட்டமன்ற தேர்தலிலும் அன்பரசன் இதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 636 ஓட்டுகள் பெற்றவர்.