72-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பில், தனுஷின் ‘ராயன்’ படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்கள், விமர்சகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த தனுஷ் , ‘ராயன்’ படத்திற்கு விருது தானாக கிடைத்ததாகவும், இது தமிழனாக தனக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும், ரசிகர்களின் அதிருப்தியை மதிக்கும் அதே வேளையில், கடந்த காலங்களில் விருது கிடைக்காத படங்களையும் சுட்டிக்காட்டி, தன்னை தட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
