Skip to content
Home » சிஎஸ்கேவில் விளையாடப்போவது மகிழ்ச்சி…. ரச்சின் ரவீந்திரா பேட்டி

சிஎஸ்கேவில் விளையாடப்போவது மகிழ்ச்சி…. ரச்சின் ரவீந்திரா பேட்டி

  • by Senthil

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.  இதில் 10 அணிகள்  பங்கேற்கிறது.  இந்த ஏலத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அசத்திய நியூசிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 1. 80 கோடிக்கு எடுத்தது. ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஏலத்தில் எடுத்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை அணியில் சேர்ந்தது குறித்தும் தோனியுடன் இணைந்து விளையாடபோவது குறித்தும் ரச்சின் ரவீந்திரா கூறுகையில், ‘முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தோனி மற்றும் ஜடேஜா போன்ற தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடப்போவதை நினைத்தால் பெருமையாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எவ்வாறு வரவேற்பினை அளிப்பார்கள், மைதானத்தில் எப்படி உற்சாகமான சூழ்நிலை இருக்கும் என்பது குறித்து ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் என்னிடம் நிறைய கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய ஆதரவிற்கு மத்தியில் நானும் சென்னை அணியின் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன்’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!