Skip to content
Home » ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு…. மக்களவை சபாநாயகர் அதிரடி

  • by Senthil

பிரதமர்  மோடி குறித்து2019 மக்களவை தேர்தலின்போது அவதூறாக பேசிய வழக்கில் நேற்று  குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம்   ராகுல்காந்திக்கு  2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.  உடனடியாக அவருக்கு  ஜாமீனும் வழங்கியது. அரசியல் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் தகுதி  நீக்கம் செய்யப்படுவார்கள். அதன்படி இன்று  மதியம் ராகுல் காந்தி  தகுதி நீக்கம்(எம்.பி.பதவி பறிப்பு) செய்யப்பட்டார். மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.   மக்களவை செயலகம் என்பது மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் செயல்படுவதாகும். தற்போது ராகுல் காந்தி  கேரள மாநிலம் வயநாடு எம்.பியாக இருந்தார்.

ராகுல் காந்தி நேற்றோ, அல்லது இன்று காலையிலோ உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தால்  அவர் பதவி நீக்கத்தில் இருந்து தப்பி இருக்கலாம். ஜாமீன் மனு தாக்கல் செய்ய 1 மாத காலம் கோர்ட் அவகாசம் வழங்கிய நிலையில் அவர் மீது அவசர அவசரமாக மக்களவை செயலகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!