Skip to content
Home » கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

கனமழை… சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு…. திருவாரூரில் சோகம்..

  • by Senthil

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நன்னிலம் அருகே அதம்பார் ஊராட்சி ஒத்தவீடு கிராமத்தை சேர்ந்த மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் ராஜசேகர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்து.

இதில் அவரது மகள் மோனிஷா (9) சம்பவ இடத்திலேயே பலியானார். அருகே படுத்திருந்த மகன் மோகன்தாஸ் (12) சிறுவன் காயம் அடைந்தார். உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறுவன் மோகன்தாஸ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!