Skip to content
Home » சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

சென்னையில் கனமழை….. திருச்சி ரயில்கள் தாமதம்

‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னையில்   நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில்  வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய சாலைகளிலும் மழை வெள்ளம் ஆறாக ஓடுகிறது.

முன்னதாக, புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 6 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையில் ரத்துசெய்யப்பட்ட ரெயில்கள், மாற்று ரெயில்நிலையம் மூலம் புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரெயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1.15 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரெயில், திருவள்ளூரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். திருவனந்தபுரம் செல்லும் ரெயில், ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும். மங்களூர் விரைவு ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும். ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரெயில், அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது போல திருச்சியில் இருந்து காலை  சென்னை புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் 11 மணி அளவில் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.   அதன்பிறகு சிக்னல் கிடைத்ததும்  எழும்பூர் புறப்பட்டு செல்லும.

சென்னை எழும்பூரில் இருந்து  காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய  சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்  காலை 9.15 மணிக்கு தான் புறப்பட்டது.   வழக்கமாக இந்த ரயில் மாலை 3 மணிக்கு  திருச்சி வந்தடையும்  ஆனால் இன்று மாலை 6 மணிக்கு மேல் தான் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல சென்னையில் இருந்த புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாகவே புறப்படுகிறது. எனவே அவை தாமதமாக வரும் என  தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!