Skip to content
Home » சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்காரம்….. தஞ்சை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தஞ்சாவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2014ம் ஆண்டு  அங்குள்ள ஒரு  கவரிங்  நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அவருக்கும், அக்கடை அருகே கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்த ஒரத்தநாடு உஞ்சியவிடுதியைச் சேர்ந்த சிவா என்கிற பிரமோத் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் ஊட்டியில் தனது உறவினர் பள்ளிக்கூடம் நடத்தி வருவதாகவும், அதில் உன்னை சேர்த்து விடுகிறேன் என்று அந்த சிறுமியிடம் சிவா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த சிறுமியை சிவா வலுக்கட்டாயமாக ஊட்டிக்கு அழைத்துச் சென்று அங்கு அறையில் அடைத்து வைத்து  வன்புணர்வு செய்துள்ளார்.

இதற்கிடையில் தனது மகளைக் காணவில்லை என தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியை மீட்டு, சிவாவை கைது செய்தனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து சிவாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 31 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!