Skip to content
Home » வீட்டில் பதுக்கியிருந்த 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்… வாலிபர் கைது…

வீட்டில் பதுக்கியிருந்த 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்… வாலிபர் கைது…

  • by Senthil

தஞ்சை அருகே அய்யம்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மீன்பண்ணைகளில் மீன்களுக்கு உணவுக்கு பயன்படுத்துவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் உத்தரவின் பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அய்யம்பேட்டையை அடுத்த புள்ளமங்கை கோவில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் ரேஷன் அரிசி 1,100 கிலோ பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது.

அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வங்கி மீன் பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக பிரபாகரன் (28) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!