Skip to content
Home » ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

ரஜினி மகள் வீட்டில் திருட்டுபோன மேலும் 43 சவரன் நகை மீட்பு

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண் ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர். ஈஸ்வரியும், வெங்கடேசனும் நீதிமன்ற காவலோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஐஸ்வர்யா வீட்டு பணியாளர் ஈஸ்வரி, வெங்கடேசன் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டு நேற்று அனுமதி அளித்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருட்டு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வீட்டின் பணியாளர் ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 100 சவரன் தங்க நகை, 30 கிராம் வைர நகை, ரூ.1 கோடி மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 100 சவரன் நகைகளை மீட்கும் பணியில் தேனாம்பேட்டை போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!