Skip to content
Home » தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

 தீபாவளிக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த  அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் திருப்பூரில்  தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் தனது தியேட்டரில் 6 காட்சிகள் திரையிட்டாராம். இதுபற்றிய புகார்கள் வந்ததால் தாசில்தார் அங்கு சென்று நடவடிக்கைஎடுத்து தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில் தியேட்டர் அதிபர் சுப்பிரமணியம், சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது,  சொந்த வேலை காரணமாக , நல்ல பெயருடன் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!