முன்னாள் தேசிய கால்பந்து வீரரும், கோவை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரியுமான 41 வயதான அசீம் கொராலியாடன், புதன்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். சிங்கநல்லூரில் உள்ள தனது வீட்டிலிருந்து பணிக்குச் செல்லும் போது, சித்ரா விமான நிலையப் பகுதிக்கு அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேசிய அளவில் அறியப்பட்ட இவர், கேரளாவின் 21 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பெற்று, சந்தோஷ் கோப்பைத் தொடரில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
சாலை விபத்து…கோவை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி பலி
