Skip to content
Home » பிரபல ரவுடி வெட்டிக்கொலை…..

பிரபல ரவுடி வெட்டிக்கொலை…..

சேலம் வீராணம் அருகே உள்ள வலசையூரை சேர்ந்தவர் காட்டூர் ஆனந்தன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட  10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு காட்டூர் ஆனந்தன், தனது நண்பரான பிரபாகரனுடன் வெள்ளியம்பட்டியில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் வலசையூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

காட்டூர் சுடுகாடு அருகே சென்றபோது, 3 கார்களில் வந்த 6 பேர் கும்பல் காட்டூர் ஆனந்தன் மற்றும் அவரது நண்பர் பிரபாகரனை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த காட்டூர் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும்,பிரபாகரன் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காரிப்பட்டி போலீசார், காயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, காட்டூர் ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக காட்டூர் ஆனந்தன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!