திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் உலகமணி மகள் ஜெய சுகந்தி(40).
இவர், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே
முன் விரோதம் இருந்த வந்தது.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் சுகந்தி தனியாக இருப்பதை அறிந்த முனிரத்தினத்தின் மகன் தனுஷ் (24). என்பவர்,
கத்தியுடன் சுகந்தி வீட்டை நோக்கி ஆவேசமாக சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தி உடனே கதவை மூடினார்.
அப்போது அந்த வாலிபர் ஜன்னல் வழியாக கத்திய காண்பித்து தகாத
வார்த்தைகளால் திட்டி
கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் இதனை தனது செல்போனில் பதிவு செய்த சுகந்தி சமூக வலைத்தளத்தில் பரப்பினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. பின்னர் இது குறித்து ஜெய சுகந்தி கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார்தனுஷ் மற்றும் இவரது தாய் ஸ்ரீதேவி இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதில் தனுஷ் கைது செய்யப்பட்டார் தலைமறைவான ஸ்ரீதேவியை போலீசார் தேடி வருகின்றனர்..