Skip to content
Home » ரூ.1000 உரிமைத்தொகை… கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…

ரூ.1000 உரிமைத்தொகை… கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்…

கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். நேற்று முன்தினம் இதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றைய தினமே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மகளிர் சிலருக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில்

செலுத்தப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ளவர்களுக்கு இன்று செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மகளிர் உரிமை தொகையை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை வெள்ளலூர், செல்வபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களது இல்லங்களின் முன்பு கோலமிட்டு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!