சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலையில் இருந்து 4.54 கிலோ தங்கம் திருடப்பட்டது. தங்கம் திருட்டு வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

