சபரிமலை தங்கத் திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை தேவசம் போர்டு கண்காணித்து வருகிறது எனவும் கேரளா ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் பதில் மனு தாக்கலுக்கு பின் விசாரிப்பதாக கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

