Skip to content

கடலில் பாதுகாப்பு ஒத்திகை: தஞ்சை போலீசார் அதிரடி நடவடிக்கை

  • by Authour
தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள் கடல்  வழியாக ஊடுருவலை தடுக்கும் வகையில் இன்று  பாதுகாப்பு ஒத்திகை  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது வருகிறது, கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை கூடுதல் இயக்குனர் சஞ்சய் குமார் உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜ் மேற்பார்வையில் பட்டுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில்அதிராம்பட்டினம் உதவி ஆய்வாளர் பிச்சைவேம்பு ஆகியோர் கடலோர பாதுகாப்பு ஒத்திகை ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒத்திகைக்கு சாகர் கவாச் என்று பெயரிடப்பட்டுள்ளது. தஞ்சை கடலில் கடலோர பாதுகாப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ,அதோடு கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களிடத்தில் அடையாள அட்டை ,படகில் உள்ள ஆவணங்கள் மற்றும் படகில் மர்ம பொருள் இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் துறைமுகம் மற்றும் கடலோர சாலைகள் மற்றும் சோதனை சாவடிகள் போன்றவற்றில் போலீசார்  வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அதிரடி சோதனை  இன்று கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் நடந்து வருகிறது.
error: Content is protected !!