முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 20% பிடிக்கப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் அந்த தொகையானது, பாதிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். பெண்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அசாம் அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
