Skip to content
Home » கடன் தொல்லை… மகளை கொன்றுவிட்டு தந்தை-மகன் தற்கொலை…

கடன் தொல்லை… மகளை கொன்றுவிட்டு தந்தை-மகன் தற்கொலை…

  • by Senthil

சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் ( 54). இவர் நோட்டு புத்தகம் ஒட்டும் வேதிப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களது மகன் ரிஷிகேசன் (30). இவர் பி.இ. படித்து விட்டு தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து வந்தார். மகள் பூஜா (23). இவர் பி.காம். படித்து விட்டு கோவையில் தங்கி சி.ஏ. படிப்பதற்கான பயிற்சி எடுத்து வந்தார். இவர் விடுமுறையில் தற்போது சேலத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் உறவினர் ஒருவருக்கு சேலத்தில் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்க்க நிர்மலா காலை ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு திறந்து இருந்தது. வீட்டிற்குள் சென்ற நிர்மலா பெரும் அதிர்ச்சியானார். ரூமில் மகள் பூஜா கழுத்தில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். வீட்டில் கணவர் வெங்கடேசன், மகன் ரிஷிகேசன் 2 பேரும் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியான நிர்மலா கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து நிர்மலா போலீசில் புகார் அ ளித்தா்.  இதுகுறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வௌியாகியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது… ‘நிர்மலா வீட்டை விட்டு வெளியில் சென்ற பிறகு தந்தை மகன், மகள் மட்டும் வீட்டில் இருந்து உள்ளனர். இந்த நிலையில் பூஜாவின் கழுத்தில் தூக்கு மாட்டி காயத்துடன் கட்டிலில் சடலமாக கிடந்தார். எனவே முதலில் பூஜாவை கொன்று விட்டு அதன்பிறகு தந்தை, மகன் 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கலாம். இருப்பினும் வெங்கடேஸ்வரன் ஒரு நோட்டு புத்தகத்தில் யார், யாரிடம் தான் கடன் வாங்கினேன், எவ்வளவு பணம் வாங்கியுள்ளேன் என்பதை எழுதி வைத்துள்ளார். எனவே கடன் தொல்லையால் 3 பேரும் இறந்தனரா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம்’ என்றனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 3 பேரின் உடல்களையும் பார்த்து நிர்மலா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!