Skip to content
Home » ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு ………சம்பாய் சோரன் அரசு வெற்றி

ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு ………சம்பாய் சோரன் அரசு வெற்றி

  • by Senthil

ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 31ம் தேதி  கைது செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து  ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.  சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார். ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம்.அதேவேளை, காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் 47 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிச்சயம் நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது  ஹேமந்த் சோரனும் வாக்கெடுப்புக்கு வந்திருந்து வாக்களித்தார். இதில் சம்பாய் சோரன் அரசு 47 ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றது.  நம்பிக்கை இல்லை என  29 பேர் வாக்களித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!