புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், புதுநிலைவயல் ஊராட்சி, கீழாநிலைக்கோட்டையில், புதிதாக கட்டப்படவுள்ள சமுதாயக்கூடம் கட்டடப் பணிக்கு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (15.06.2023) அடிக்கல் நாட்டினார். உடன் அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணராஜா, பஞ்சநாதன், ஊராட்சிமன்றத் தலைவர் பெரியகருப்பன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
மேலும் புதுகையில் மிரட்டநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் , புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆறு வகுப்பறை கட்டடத்தினை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.