Skip to content

ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் ஆதிதிராவிட துறை அமைச்சர்  மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பாதுகாப்பு படை உயரதிகாரிகள் வரவேற்றனர்.

இரவு கோவை மாநகரில் உள்ள நேவல் ஆபீஸர் மெஸ் வளாகத்தில் தங்குகிறார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின்  மனைவி சாவித்திரி சிங் (72) உடல் நலக்குறைவு காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரை பார்த்து நலம் விசாரிக்க  வந்த ராஜ்நாத் சிங்,  மாலை 6.15 மணி அளவில் மருதமலை சென்று  தரிசனம் செய்தார். முதலில் ஆதி மூலஸ்தான சுவாமியையும்,  பின்னர் பஞ்சமுக விநாயகரையும் தரிசனம் செய்தார்.  தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் மாலை 6.45 மணிக்கு அங்கிருந்து  அவர் கிளம்பினார்.

வந்த அவர் தனது மனைவியை மருத்துவமனையில் பார்த்துக் விட்டு மாலை 6:15 மணி அளவில் சுவாமி தரிசனம் செய்தற்காக மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு வந்த அவர் முதலில் ஆதி மூலஸ்தான முருகப்பெருமானையும் பின்னர் பஞ்சமுக விநாயகரையும் தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்தார் பின்னர் அங்கு இருந்து 6.45 மணி அளவில் கிளம்பினார்.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூர் மாநகரில் காவல் துறையினரின் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையம், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் காவல் துறையினர்  கூடதுலுழகு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

error: Content is protected !!