சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் கொண்டாட வைத்துள்ளது.வெளிநாடுகளிலும், மற்ற மாநிலங்களிலும் அதிகாலை காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் தீபாவளியை இப்பவே கொண்டாடி வருகின்றனர்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு சேர்ந்து ஜெயிலர் படம் பார்க்க லதா
ரஜினி, மகள் ஐஸ்வர்யா ரஜினி ஆகியோர் வந்தனர். தியேட்டரில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். ரஜினி ரசிகர்கள் உற்சாக மடைந்தனர்.
குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ஜெயிலர் படம் பார்ப்பதற்காக இசையமைப்பாளர் அனிருத், நடிகை ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வந்திருந்தனர். அங்கு ரசிகர்களோடு சேர்ந்து அனிருத் பாட்டுப்பாடி அசத்தினார்.
நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் டா….
மேலும் நடிகர் தனுஷ் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு சேர்ந்து ஜெயிலர் படம் பார்க்க வந்தார். தான் சூப்பர் ஸ்டார் ரசிகன் என்பதை தனுஷ் நிரூபித்துவிட்டார் என ரசிகர்கள் கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.