கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குட்பட்ட சின்னதாராபுரம், எலவனூர், தும்பிவாடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கலந்து கொண்டு இலவச சைக்கிளை வழங்கினார்.
குறிப்பாக தும்பிவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ சிறப்புரையாற்றியபோது தமிழக அரசு சார்பில் எண்ணற்ற நலத்திட்டங்கள் பள்ளிக் கல்வித் துறை மூலமாக மாணவர்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் பல நாட்களாக பெண்கள்
கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கழிப்பறை கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதேபோல் ஸ்மார்ட் கிளாஸ் வசதியும், மாணவர்கள் அமர்வதற்காக போதுமான இருக்கை வசதியும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.