கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து பெற்றோரிடம் மாணவி அளித்த தகவலின் அடிப்படையில், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை
