சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அரசினர் தனித்தீர்மானத்தை வரவேற்பதாக விசிக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று தீர்மானத்தை ஆதரித்து பேசிய அவர், மக்களே சாதியை கூற வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக குழப்பம் ஏற்படுத்துகிறது. பொதுமக்களே சாதியை தெரிவிக்கும் முறையை கைவிட வேண்டும். மாநில அளவில் உள்ள பிசி, எம்பிசி பட்டியலை பயன்படுத்த வேண்டும். தற்போதைய நிலை தொடர்ந்தால் 2011-ல் ஏற்பட்ட குழப்பம் நீடிக்கும் என்றார்.
