Skip to content
Home » சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

சர்வீஸ்-க்கு வந்த காரில் 10 அடி நீள மலைப்பாம்பு… மீட்பு…

  • by Senthil
நெல்லை மாவட்டம்,ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் டாடா டியாகோ கார் ஒன்றை வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கார் அவ்வப்போது பழுதடைந்து வந்ததால், காரை சர்வீஸ் சென்டரில் விட அவர் முடிவு செய்தார். இதன்படி தெற்கு வள்ளியூரில் உள்ள டெரிக் டாட்டா கார் ஷோரூமிற்கு அந்த காரை எடுத்து வந்து அவர் விட்டுள்ளார். வழக்கம்போல் ஊழியர்கள் சர்வீஸ் செய்வதற்காக கார் பானெட்டை திறந்த போது, உள்ளே மிகப்பெரிய பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரின் உள்ளே பார்த்தபோது அது மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து நீண்ட நேரம் போராடி அந்த பாம்பை பத்திரமாக பானெட்டில் இருந்து மீட்டனர். அது ராக் பைத்தான் வகை மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பாம்பை வனத்துறையினரிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!