Skip to content

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை , என்னென்ன பிரிவுக்கு என்ன தண்டனை?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு  இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அவருக்கு 30 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து  நீதிபதி  தீர்ப்பளித்தார்.  அவர் மீது 11 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த 11 பிரிவுகளிலும்  குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவுக்கும் என்ன தண்டனை என்பதை  விவரமாக பார்க்கலாம். 329 – மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்து கொள்ளுதல் – 3 ஆண்டுகள் சிறை 126(2) – மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் – ஒரு மாதம் சிறை. 87 – வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் – 10ஆண்டுகள், ரூ.10,000 அபராதம். 127(2) – உடலில் காயத்தை ஏற்படுத்துதல் – 1 ஆண்டு சிறை. 75(2) – விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் – 3 ஆண்டுகள் 76 – கடுமையாக தாக்குதல் – 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம். 64(I) பாலியல் வன்கொடுமை -30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள்; ரூ.25,000 அபராதம். 351(3) கொலை மிரட்டல் விடுத்தல் -7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம். 238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்; 3ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம். 66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் – 3 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதம். தண்டனை அனைத்தையும் அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். அதன்படி, மொத்தத்தில்  ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை குறைப்பு இல்லாமல்  அந்த தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும்.
error: Content is protected !!