ரஷ்யாவில் திடீரென வீசிய கடுமையான பனிப்புயலில் போஸ்னியாவைச் சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5,350 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பனிப்புயல் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றால் மீட்புப் பணிகளும் சிரமத்தை சந்தித்தன. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
