சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து ஓராண்டுக்கும் மேலாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இப்புகார் தொடர்பாக முதற்கட்டமாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
