Skip to content
Home » பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

பெரம்பலூர் புதுமாப்பிள்ளை சுட்டுக்கொலை….. நரிக்குறவர் வெறிச்செயல்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா நரியோடை பகுதியில் வசித்து வருபவர் ரஜினி (45 ) நரிக்குறவர். இவர் அதே சமூகத்தை சேர்ந்த  இன்னொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம். இவர்கள் அடிக்கடி சந்தித்து ஜாலியாக இருந்துள்ளனர்.

இதை அதே இனத்தை சேர்ந்த அஜீத்(26) என்பவர் ஒரு நாள் பார்த்து விட்டார். இது குறித்து அவர் தங்கள் சமூகத்தின் பெரியவர்களிடம் கூறிவிட்டார். இதனால் அவர்கள் கூட்டம் போட்டு ரஜினியிடம் கேட்டு உள்ளனர். இதனால் அவருக்கு அவமானமாகி விட்டது.

தன் கள்ளக்காதல் விவகாரம் குறித்து அனைவரிடமும் தெரிவித்த அஜீத் மீது  ரஜினிக்கு கடுமையான கோபம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று  இரவு  ஊசி, பாசிமணி விற்றுவிட்டு   ரஜினி மது போதையில் வந்தார்.  தன்னை அவமானப்படுத்திய  அஜீத்தை கொல்லாமல் விடமாட்டேன் என தகராறு செய்து கொண்டிருந்தார்.

இதை அஜீத் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென தனது கையில் வைத்திருந்த  நாட்டு துப்பாக்கியை எடுத்து ரஜினி அஜீத்தை நோக்கி சுட்டார்.

துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு,  அஜீத்தின் இடது கண்ணில் பாய்ந்து, பின்னந்தலை வழியாக வந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். உடனடியாக அவரை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அஜீத் ஏற்கனவே இறந்து விட்டதாக  என கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினியை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நரிக்குறவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.துப்பாக்கி சூட்டில் இறந்த அஜீத்துக்கு திருமணமாகி 1 மாதம் தான் ஆகிறது. அதற்குள் அவர் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!