நேற்று முன்தினம் (ஜன., 27) வெளியான SI தேர்வு முடிவுகளில் பிழை இருப்பதால், அதை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாப்ட்வேர் பிழையால் ஏற்பட்ட தவறு காரணமாக திரும்ப பெறப்படும் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வகுப்பு பிரிவு ரீதியாக எதுவும் இல்லாமல் முடிவுகள் வெளியானதால், தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

