Skip to content
Home » சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

சீர்காழி அருகே வாலிபர் மீது கொலை வெறித் தாக்குதல்… வீடியோ வைரல்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்த நரேஷ் என்பவருக்கும் அதே கிராமம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன் ,விக்னேஷ், நேசமணி ஆகியோருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் நடந்த கோவில் விழாவில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.அதன் பிறகு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில்  சிலதினங்களுக்கு முன் வடகால் கடைவீதிக்கு வந்த நரேஷை மேற்படி மணிகண்டன், ஜெகதீஷ்,மணிமாறன் உள்ளிட்ட நான்கு நபர்கள்  சேர்ந்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு பலமாக தாக்கி

அடிக்கும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த நரேஷ்,ராஜா,பாக்கியராஜ் சீர்காழி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

மேலும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மணிகண்டன் காயம் ஏற்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார், இரண்டு தரப்பினுடைய முன்விரோதம் காரணமாக தாக்குதல் நட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ், மணிமாறனை புதுப்பட்டணம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!