திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75) இவருக்கு இரண்டு மனைவிகளும், நான்கு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். சொத்து தகராறு தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் மாணிக்கத்தின் இரண்டாவது மகன் கணேசன் இறந்துவிட்ட நிலையில் கணேசனின் மனைவி மருதாம்பாள் என்பவருக்கும் மாமனார் மாணிக்கத்திற்கும் இடையே சொத்து தொடர்பாக அவ்வப்போது தகராறு நடைபெற்று வந்துள்ளது.
நேற்று மாணிக்கத்திற்கும் மருமகள் மருதாம்பாளுக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வயலில் மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மாமனார் மாணிக்கத்தை மருதாம்பாள் அரிவாளால் வெட்டியதில்
மாணிக்கம் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவின் பேரில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர்செந்தில்குமார் இறந்து போன மாணிக்கத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக
முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் மாணிக்கத்தை வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவான மருமகள் மருதாம்பாளை தேடி வருகிறார்கள். சொத்து தகராறில் மாமனாரை மருமகள் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது