Skip to content

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று பல்வேறு சிவாலயங்களில் நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அலங்காரவல்லி, சவுந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப்பொடி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம், சமர்ப்பிக்கப்பட்டு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் சுவாமிக்கு பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆடி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!