Skip to content
Home » போக்சோ வழக்குகளுக்காக மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்…

போக்சோ வழக்குகளுக்காக மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள்…

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதன்படி தமிழகத்தில் தற்போது 16 மாவட்டங்களில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கிவருகின்றன. இந்நிலையில், போக்சோ வழக்குகளை விரைவாக விசாரிக்க மேலும் 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி போக்சோ வழக்குகளை விரைவாக நடத்த திண்டுக்கல், தர்மபுரி, தேனி மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசின் நீதித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!