சென்னை எழும்பூரில் இருந்து ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் சிறப்பு ரயில் நாளை (ஜூன்.20) இயக்கப்பட உள்ளது. நாளை இரவு 11.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், நாளை மறுதினம் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். 2 ஏசி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள், 2 பொது பெட்டிகள் என 18 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
