Skip to content
Home » முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

முகநூலில் மிரட்டல்…..ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்  உள்ள  பெரியார் சிலையை இடித்துத் தள்ள வேண்டும் என ஒருவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் ஶ்ரீரங்கம் பெரியார் சிலைக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது . மேலும் ஸ்ரீரங்கம்

முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. யார் இதை பதிவிட்டது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராமநாதபுரம் திருவாடானை பகுதியை சேர்ந்த பரணி என்பது தெரியவந்துள்ளது.  எனவே அவரை கைது செய்ய திருச்சி மாநகர காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!