Skip to content
Home » ஸ்ரீரங்கத்தில் வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை…

ஸ்ரீரங்கத்தில் வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை…

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் எண்ணற்ற திருவிழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில் தை மாதத்தில் நடைபெறும் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினசரி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதிப்பார். தைதேர் உற்சவத்தின் 6ம் திருநாளான இன்று நம்பெருமாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்ந்து வாகனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வெள்ளி வாகனத்தில் வந்த பெருமாளை தரிசிக்க ஏராளமான

பொதுமக்கள் கூடியிருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9ம்திருநாளான வருகிற 03ம்தேதி காலை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!