Skip to content
Home » நிலக்கரி சுரங்க விவகாரம்…பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

நிலக்கரி சுரங்க விவகாரம்…பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

  • by Senthil

காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், நிலக்கரி சுரங்க ஏல நடைமுறைகளில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் நாளை விளக்கம் அளிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!