செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மீது இளைஞர் ஒருவர் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் நின்றபடி அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி ஓட்டுநர்கள் இளைஞரை பிடித்து தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாலிபரை கைது செய்தனர். மதுபோதையில் இந்த செயலில் ஈடுபட்டாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்கள் வீச்சு.. வாலிபர் கைது
