Skip to content
Home » 30 ஆண்டுகளுக்கு முன் படித்த….. கல்லூரியில் திரண்ட மாணவர்கள்…. மயிலாடுதுறை பிளாஷ்பேக்

30 ஆண்டுகளுக்கு முன் படித்த….. கல்லூரியில் திரண்ட மாணவர்கள்…. மயிலாடுதுறை பிளாஷ்பேக்

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தலில் ஏவிசி கல்லூரியின் இரண்டாவது பரிணாமம் பாலிடெக்னிக் கல்லூரி, இது 1983ல் 180 மாணவர்களுடன்துவங்கப்பட்டது

தற்பொழுது அடுக்குமாடி கட்டிடங்களுடன் ஆயிரக்கணக்கானோர் பயிலும் மிகப்பெரிய கல்லூரியாக திகழ்கிறது. 40 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இக்கல்லூரி மாணவர்கள் தொழில்முனைவோராக அரசுப் பணியாளராக வெளிநாட்டில் வேலைசெய்பவராக பரவி சென்றுள்ளனர்

இந்ததொழில்நுட்ப மாணவர்களது மனதில்  பழைய மாணவர்கள்  ஒன்றாக கூடும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது, இதில் 1991 முதல் 1994வரை தொழில்நுட்பம் பயின்றவர்கள் ஒன்றாக கூடவேண்டும் என்று முடிவெடுத்தனர்,

கூட்டு முயற்சியாக பல மாதம் போராடி ஒன்றிணைத்தனர். தாங்கள்  பயின்ற  கல்லூரி வளாகத்தில் அதே கல்லூரி முதல்வர், தங்களுக்குப் பாடம் கற்பித்தவர்கள் பேராசிரியர்கள், என அனைவரையும் ஒன்றினைத்து தாங்கள் படித்த கல்லூரி வளாகத்திலேயே ஒரு விழாவாக கொண்டாடினர்.

46 வயது முதல் 50 வயதுடைய மாணவர்களும் 60வது முதல் 85 வயதுவரை மூத்த ஆசிரியர்களும் கூடினர், இவர்கள் ஆசிரியர்களிடம் கல்வி பயின்றதும் ஆசிரியர்களின் கண்டிப்பு என ஆசிரியர்களின் அருமை பெருமைகளே பிரதானமாக இருந்தது.

உடல்நலத்திற்கு முக்கியத்துவம் அளியுங்கள், உணவில் கட்டுப்பாடாக இருக்கவேண்டும், எளிமையான வாழ்க்கை வாழுங்கள், கண்டிப்பாக குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள் என பேராசிரியர்களின் வேண்டுகோள் என  முன்னாள் மாணவர்களுக்கு அறிவுரை அதிகமாக வழங்கப்பட்டது,

இறுதியில் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டனர். வருடா வருடம் ஒன்றிைணவோம் என்று உறுதிகூறிச் பிரியாவிடை பெற்றுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!