டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பிரபல நடிகை ஆலியா பட் ஆதரவு தெரிவித்துள்ளார். களத்தில் நிற்கும் ஒவ்வொரு மாணவரின் போராட்டத்திற்கு பின்னாலும் ஒரு குடும்பத்தின் நம்பிக்கையும் பல தியாகங்களும் நிறைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர், வருங்கால சமுதாயத்தை உருவாக்க போராடும் மாணவர்களின் குரலுக்கு நாம் செவிசாய்க்கிறோமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
