Skip to content
Home » அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை…. உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அதிகாரிகள் நடத்திய டார்ச்சரில் அமைச்சர்  உடல்நலம் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே தனக்கு இடைக்கால  ஜாமீன் வழங்க வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  அமைச்சரின் உடல் நிலை குறித்த  எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட அனைத்து  மருத்துவ அறிக்கைகளையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.  அதைத்தொடர்ந்து கடந்த 22ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் பித்தப்பை கல், மூளையில் கட்டி , முதுகில் வலி   உள்ளிட்ட  பல பிரச்னைகள்  இருப்பது கண்டறியப்பட்டது. மேற்கண்ட மருத்துவ சோதனை முடிவு அறிக்கைகளை இன்று  வழக்கறிஞர்கள்  உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்தனர்.

அமைச்சரின் ஜாமீன் மனு வரும் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!