காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, ஜம்மு காஷ்மீரில் உள்ள நமது சகோதர சகோதரிகளின் நம்பிக்கை, வளர்ச்சிக்கானஅறிவிப்பாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது” என்று கூறி உள்ளார்.