தமிழக கவர்னர் ஆர். என். ரவி, தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது, மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது என அரசின் பணிகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கிறார் என அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பதிலும் கவர்னர் ரவி தலையிட்டு வருவதால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், கவர்னர் ரவி அரசியல் சாசன பிரிவு 200ஐ மதித்து நடக்க வேண்டும் என உத்தரவிடக்கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது.
இந்த வழக்கு 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞா்கள் வாதிட்டனர். பின்னர் 6ம் தேதி இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞா்கள் வாதத்தை முன்வைக்கலாம் என கூறி வழக்கை கோர்ட் உத்திவைத்தது.
இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆஜராகி வாதத்தை முன் வைத்தார்.
துணைவேந்தர் பதவி என்பது மிக முக்கியபொறுப்பு. எனவே அரசு மட்டும் ஏன் அதில் முடிவு எடுக்க வேண்டும் என கருதுகிறீர்கள் என்று வெங்கட்ரமணி கேட்டார்.
இதைத்தொடர்ந்து, கவர்னர் ஏன் மசோதாகக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டார். 10 மசோதாக்களை ஏன் திருப்பி அனுப்பினார். ஜனாதிபதிக்கு 2 மசோதாக்களை மட்டும் ஏன் அனுப்பினார் என்பதற்கு கவர்னர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிய நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.