Skip to content
Home » தமிழ் பல்கலை., நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்…

தமிழ் பல்கலை., நிர்வாகத்தை கண்டித்து ஓய்வு அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்…

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிர்வாகப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டது.

இருப்பினும் ஓய்வூதியம், வழங்குவதற்கு தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் செயல்பாடுகளை கண்டித்து நிர்வாக கட்டிடம் நுழைவாயில் முன்பாக ஓய்வு பெற்ற அலுவல் நிலை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு தலைவர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பொருளாளர் உன்னிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் மோகன், சித்தார்த்தன், பாலசுப்பிரமணியன், தாஸ் இமானுவேல், ராமகிருஷ்ணன், கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!